தமிழ் வழியில் படித்தவர்களுக்கு குரூப்-1 தேர்வில் 20% இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி டிஎன்பிஎஸ்சி மனுவை உயர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

டிஎன்பிஎஸ்சி 2020-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 9-ம் தேதி வெளியானது. இதில் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீட்டு சலுகை தொடர்பான உத்தரவைப் பின்பற்றவில்லை.

எனவே 2020 குரூப்-1 தேர்வில், ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

''2020-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி குரூப்-1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்தால் அதிகாரிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படும்'' என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், டிஎன்பிஎஸ்சி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்