தமிழகத்தில் இன்று 4,230 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 238 பேருக்கு பாதிப்பு: 4,952 பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 4,230 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 24,88,407. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,32,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,18,882.

இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 9 பேருக்கு மட்டும் தொற்று உறுதியானது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 44,32,501 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 238 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,992 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 203 தனியார் ஆய்வகங்கள் என 272 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,707.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,23,18,085

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,59,159.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 24,84,177.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,230.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 238.

* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 2713.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,54,474 பேர். பெண்கள் 10,33,895 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,418 பேர். பெண்கள் 1,812 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,952 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 24,18,882 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 97 பேர் உயிரிழந்தனர். 23 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 74 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32,818 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 79 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 18 பேர்.

இன்று மாநிலம் முழுவதும் 39833 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26981 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6317​​​​​​​ ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்