*
பூசாரியை தற்கொலைக்கு தூண்டி யதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்தின் தம்பி ஓ.ராஜா மீதான வழக்கில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை ஜனவரி 6-ம் தேதி தொடங்குகிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தவர் டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண் டார்.
தனது தற்கொலைக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டி, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகிய ஏழு பேர்தான் காரணம் என நாகமுத்து கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து ஏழு பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி பூசாரியின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உத்தரவும் பெற்றார்.
இதையடுத்து இந்த வழக்கு டிச.4-ம் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உட்பட ஏழு பேரும் ஆஜராகினர். ராஜா தரப்பில் வழக்கறிஞர் கண்ணப்பன் ஆஜரானார்.
நீதிபதி பூர்ணிமா இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். ஜனவரி 6-ம் தேதி முதல் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
கல்வி
2 mins ago
சுற்றுச்சூழல்
4 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago