பொன்னேரி கிளை சிறையில் கைதிகளை பார்க்க லஞ்சம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவை அருகே கிளை சிறை செயல்பட்டு வருகிறது.

இங்கு வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் 100பேர் வரை விசாரணை கைதிகளாகநீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, அவர்களின் உறவினர்கள் பார்ப்பதற்கு சிறைத் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்நிலையில், சமீபகாலமாக பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்படும் விசாரணை கைதிகளை, அவர்களது உறவினர்கள் பார்ப்பதற்கு ரூ.1,000 வரை லஞ்சமாக கிளை சிறை காவலர்கள் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இச்சூழலில், பொன்னேரி கிளை சிறையின் வாயிலில் இருந்து கைதிகளை பார்ப்பதற்கு உள்ளே செல்ல காத்திருக்கும் உறவினர்கள் சிறைக்குள் உள்ள காவலர்களிடம் ஜன்னல் வழியாக லஞ்சமாக பணத்தை அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்