அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 28-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது, ‘‘முதல்வர் ஜெய லலிதா தலைமையில் அவருக்கு எந்நாளும் விசுவாசத் தொண்டர் களாக இருப்போம், முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம், பொய்ப் பிரச்சாரங்களால் அரசியல் மறுவாழ்வு பெற முயற்சிக்கும் எதிர்மறை அரசியல் சக்திகளின் சதியை முறியடிப்போம், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு அமைய பாடுபடுவோம்’’ என ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி
எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக எம்.பி.க்கள் ஏ.அன்வர்ராஜா, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 mins ago
விளையாட்டு
45 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago