சேத்துப்பட்டு: ஒதலவாடி ஆற்றுப்படுகையில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஒதலவாடி கிராமத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப் படுகையில் அதிகாலை நேரத்தில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேத்துப்பட்டு வட்டாட்சியர் பூங்காவனம் மற்றும் சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் வரதராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஆற்றுப் படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். விரைந்து சென்ற அதிகாரிகள் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
7 mins ago
க்ரைம்
42 mins ago
சுற்றுச்சூழல்
48 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago