புதுச்சேரியில் புதிதாக 642 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு பெண் உட்பட 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 9) வெளியிட்ட தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 8,516 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 496, காரைக்கால் – 110, ஏனாம் – 22, மாஹே – 14 என மொத்தம் 642 (7.54 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 3 பேர், காரைக்காலில் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனாம், மாஹேவில் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,648 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 748 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,065 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,788 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 6,853 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 247 (92.32 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 11 லட்சத்து 29 ஆயிரத்து 875 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 119 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 542 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
24 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
32 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
38 mins ago
ஆன்மிகம்
48 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago