காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

By செய்திப்பிரிவு

வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர் கள் 10 பேர் நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

காரைக்காலை அடுத்த காரைக் கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பரமசாமி மகன் வீரமணி யின் விசைப்படகில் அவர் உள்ளிட்ட 10 பேர் கடந்த 6-ம் தேதி காரைக்கால் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென் கிழக்கே 20 கடல் மைல் தொலை வில் கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு நேற்று அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப் போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மீனவர்களை படகுடன் காங்கேசன் துறைமுகத் துக்கு கொண்டு சென்றனர்.

வீரமணி, அவர் மகன் வீர ராஜன், பொன்னுசாமி, ரங்கநாதன், வினீத், ரவிக்குமார், அஜீத்குமார், காளிராஜ், இடும்பன், நீலமேகம் ஆகிய 10 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். இலங்கையின் காரை நகர் அருகில் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர்களை டிசம்பர் 21-ம் தேதி வரை காவ லில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டதையடுத்து அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட்டனர்.

இவர்களில் காளிதாஸ் நாகூரை யும், நீலமேகம் அக்கரைப்பேட் டையையும் சேர்ந்தவர்கள், மற்ற அனைவரும் காரைக்கால் மேட் டைச் சேர்ந்தவர்கள்.

காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தாரான வீரதாஸ் நாட் டார் இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறியபோது, “மழையால் மீனவர் கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில் தற் போது இலங்கை கடற்படையினர் 10 பேரை கைது செய்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீனவர்களை யும், படகையும் விடுவிக்க ஆவன செய்ய வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

26 mins ago

தமிழகம்

53 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்