தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூன் 03) வெளியிட்ட அறிக்கை:

"வெப்பச்சலனம் மற்றும் தெலங்கானா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

ஜூன் 3 (இன்று) அன்று மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 4 அன்று தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 5 அன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 6, ஜூன் 7 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கடல மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

திருச்சி மாவட்டம் நாவலூரில் 12, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் 7, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், கோவை மாவட்டம் சோலையாறு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலா 5, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்த தலா 4, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி விமான நிலையத்தில் தலா 3, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், ஈரோடு மாவட்டம் பவானி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், உதகையில் தலா 2, கரூர் மாவட்டம் தோகைமலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஜூன் 3 அன்று குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை தென்கிழக்கு அரபிக்கடக், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகள இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் மேற்கு பருவமழை கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று தொடங்கியுள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

39 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்