பவானிசாகர் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு 20.12.2015 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி மற்றும் ஈரோடு வட்டங்களில் உள்ள 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்