முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளன.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நேற்று (மே 16) மட்டும் தமிழகம் முழுவதும் 33,181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 6,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 311 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தொழில் துறையினர் உள்ளிட்டோர், முதல்வரைச் சந்தித்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (மே 17) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர், முதல்வரைத் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினர்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
26 mins ago
ஓடிடி களம்
28 mins ago
விளையாட்டு
43 mins ago
சினிமா
45 mins ago
உலகம்
59 mins ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
48 mins ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago