ஹாட் லீக்ஸ்: நினைவூட்டினார்... நிறைவேற்றினார்

By செய்திப்பிரிவு

மருத்துவர்கள் உள்ளிட்ட கரோனா முன்களப் பணியாளர்கள் கரோனா பாதித்து இறந்தால், 50 லட்ச ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும் என முதலில் அறிவித்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. ஆனால், அந்த அறிவிப்பை முழுமையாகச் செயல்படுத்த போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையாம் அவர். இது விஷயமாக, ‘நாம் கொடுத்த அஷ்யூரன்ஸை செய்து கொடுக்கவில்லை என்றால் கரோனா காலத்தில் சிக்கலாகிவிடும்’ என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மூன்று முறை முதல்வருக்கு கடிதமும் எழுதினாராம். அதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் இவ்விஷயத்தை முதலவர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்றாராம் ராதாகிருஷ்ணன். இதையடுத்தே, கரோனாவுக்குப் பலியான 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும் கோப்பில் உடனடியாகக் கையெழுத்திட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்