திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள்: அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், உரிய அனுமதியுடன் திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார்பேருந்துகளின் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

இருப்பினும், திருமணம், இறப்பு, மருத்துவப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு உரிய அனுமதியுடன் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கிவருகிறோம். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.40 என்ற கட்டண அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது ஊருக்கு ஏற்றார்போல், இடத்துக்கு ஏற்றார்போல் மாறும்.

பேருந்துகள் தேவைப்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 9445030523, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 9445014416, விழுப்புரம் - 9445021206, கோவை - 9442268635, கும்பகோணம் - 9487995529 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்