சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அவர்களுக்கு தனி வார்டு இல்லாததால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
காரைக்குடியில் சூரக்குடி ரோட்டில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சீமாங் பிரிவில் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன.
இதனால் காரைக்குடி மட்டுமின்றி தேவகேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றன.
தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு தனி வார்டு இல்லை.
இதையடுத்து அவர்களை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் ஏழை கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். இதையடுத்து காரைக்குடி அரசு மருத்துவமனையிலேயே தனி வார்டு ஏற்படுத்தி கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன், ‘அரசு உத்தரவுபடி கரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறோம்.
காரைக்குடியில் தேசிய சுகாதாரத் திட்டத்தில் மகப்பேறுக்காக ரூ.10.5 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் 20 நாட்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இங்கு 300 படுக்கை வசதிகள் உள்ளன. அக்கட்டிடம் திறந்தபிறகு அங்கு தனியாக கர்ப்பிணிகளுக்கு கரோனா வார்டு ஏற்படுத்தப்படும்.
மேலும் சிவகங்கை ஆட்சியர் உத்தரவுபடி, மானாமதுரை, திருப்பத்தூர், சிவகங்கை அருகே பன்னைக் கல்லூரியில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தனி வார்டு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago