“திமுக ஆட்சிக்கு வரமுடியாது... ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது” என்றெல்லாம் ஜனவரி மாதம் வரைக்கும் கொளுத்திப் போட்டுக் கொண்டிருந்த மு.க.அழகிரி, “என் தம்பி ஸ்டாலின் முதல்வரானதற்கு வாழ்த்துகள்... திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்” என்றெல்லாம் திருவாய் மலர்ந்து திமுகவினரை திக்குமுக்காட வைத்திருக்கிறார். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் அழகிரியின் மகன் துரை தயாநிதியும் கலந்து கொண்டு தம்பி உதயநிதியைக் கட்டித் தழுவியது காணக்கிடைக்காத காட்சி. எப்படி இந்த திடீர் மாற்றம்? வெற்றிச் சான்றிதழை வாங்கிக் கொண்டு தயாளு அம்மாளிடம் ஆசிபெறச் சென்றார் ஸ்டாலின். அம்மாவுடன் மகள் செல்வியும் இருந்தாராம். மகனை ஆசிர்வாதம் செய்த கையோடு அழகிரியைப் பற்றி கலங்கிய கண்களோடு சைகையாலேயே பேசினாராம் தயாளு அம்மாள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அருகில் நின்ற செல்வி உடனே அழகிரிக்கு போன் போட்டு ஸ்டாலினிடம் போனைக் கொடுத்துவிட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின், போனை வாங்கி அண்ணனுக்குப் பேச... பதிலுக்கு தம்பிக்கு அண்ணன் வாழ்த்துச் சொல்ல... கலைஞர் இல்லமே உணர்ச்சிமயமாகிப் போனதாம். இதையடுத்து இரண்டு குடும்பத்தினரும் மாறி மாறி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்களாம். இதன் வெளிப்பாடுதான் அழகிரியின் பாச மழை என்கிறார்கள். கூடிய சீக்கிரமே அண்ணன் - தம்பி சந்திப்பு நடக்கலாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
விளையாட்டு
4 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
11 mins ago
தமிழகம்
46 mins ago
ஓடிடி களம்
48 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago