கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அதிகாலையில் தனியார் சொகுசுப் பேருந்து தீ பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த பய ணிகள் அனைவரும் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர்.
பெங்களூருவை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் தனியார் சொகுசுப் பேருந்து நிறுவனத்துக்கு சொந்தமான ஏசி சிலிப்பர் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்டது. இந்தப் பேருந்தில் 32 பயணிகள் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத் தங்கரை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாமோ தரன்(34) பேருந்தை ஓட்டிச் சென் றார். பேருந்து நேற்று அதிகாலை கிருஷ்ணகிரியைக் கடந்து ஓசூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. சூளகிரி அருகேயுள்ள மேலுமலை என்ற பகுதியில் சென்றபோது பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதைக் கண்ட ஓட்டுநர் தாமோதரன் உட னடியாக பேருந்தை சாலை யோரம் நிறுத்திவிட்டு பயணி களை பேருந்தை விட்டு இறக் கினார். இதற்கிடையே பேருந்து முழுக்க தீ பரவத் தொடங்கி கொழுந்துவிட்டு எரியத் தொடங் கியது.
தீயணைப்பு வீரர்கள் வருவதற் குள் பேருந்து முழுவதும் எரிந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தின் ஏசி பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக் கலாம் என தெரியவந்துள்ளது. இதுபற்றி சூளகிரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுலா
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
தமிழகம்
7 hours ago