பரமக்குடி அருகே மூதாட்டியை கொலை செய்து 18 பவுன் திருட்டு

By செய்திப்பிரிவு

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் தென்னந்தோப்பில் தனியாக இருந்த 92 வயது மூதாட் டியை கொலை செய்துவிட்டு, 18 பவுன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி காளிமுத்தம்மாள் (92). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந் தன் இறந்துவிட்டார்.

இவர்களது 2 மகன்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டி காளிமுத்தம்மாள் தனது வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்புக்கு தினமும் சென்று வருவது வழக்கம். நேற்று மதியம் தனது வீட்டிலிருந்து தென்னந்தோப்புக்கு மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகை களை கேட்டனர். அவர் தர மறுத்ததால் தலையைப் பிடித்து சுவரில் மோதிக் கொலை செய்து விட்டு, காதை அறுத்து நகைகள் உள்ளிட்ட 18 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர் தோப்புக்குச் சென்று பார்த்தபோது, மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்பி இ. கார்த்திக், பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் சென்று விசாரணை நடத்தினர்.

பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்