கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி பூந்தோட்டம் பகுதியில் வசித்து வரும் மரவியாபாரி பஞ்சலிங்கம். இவரது மகன் அன்பரசன் (29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தவர், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி ஒருவருக்கு துப்பாக்கியுடன் கூடிய பாதுகாவலராக (Gunman) பணியாற்றினார்.
இவருக்கும், ராயக்கோட்டை அருகே பழையூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அருணா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த யுகாதிக்கு பண்டிகைக்காக அருணா, தாய் வீட்டுக்கு சென்றார். இதனிடையே, நேற்று (ஏப். 21) காலை வீட்டில் இருந்து பணிக்கு சென்ற அன்பரசன், மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஏப். 22) காலை நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொண்டு வரும் பணியாளர் ஒருவர், நீதிமன்றத்தில் மேல் பகுதிக்கு சென்றார். அங்கு அன்பரசன், ரத்தம் வழிந்தோடியே நிலையில் உயிரிழந்து காணப்பட்டார்.
தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டிகங்காதர், ஏடிஎஸ்பி அன்பு, டிஎஸ்பி-க்கள் சரவணன், சுப்பிரமணி மற்றும் போலீஸார், வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில், அன்பரசன் துப்பாக்கியால் சுடப்பட்ட தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபபட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுக்கா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் நீதிமன்ற பணிகள் இன்று முற்றிலும் முடங்கியது. நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள், போலீஸார், செய்தியாளர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
கருத்துப் பேழை
2 mins ago
தமிழகம்
40 mins ago
சினிமா
45 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
2 hours ago
கல்வி
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago