தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தூத்துக்குடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகளுக்கு, டிஎஸ்பி கணேஷ் தகவல் தெரிவித்தார்.
வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் அருண்குமார், வனக்காப்பாளர் ரெங்கநாத் உள்ளிட்டோர் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள குடோனில் கேன்களில் 100 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த பா.மணிக்கீரிவன் (29) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய தூத்துக்குடியை சேர்ந்த மன்சூர் அலி என்பவரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
14 mins ago
கல்வி
7 mins ago
இந்தியா
4 mins ago
தமிழகம்
10 mins ago
ஓடிடி களம்
17 mins ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago