புதுச்சேரியில் ஒரே நாளில் 306 பேருக்கு கரோனா; 2 பேர் உயிரிழப்பு: மொத்த பாதிப்பு 44 ஆயிரத்தை கடந்தது

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் ஒரே நாளில் 306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஏப். 11) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,348 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 210 பேருக்கும், காரைக்காலில் 71 பேருக்கும், ஏனாமில் 22 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 306 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி காமராஜ் நகரைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஜிப்மர் மருத்துவமனையிலும், காரைக்கால் நிரவியைச் சேர்ந்த 44 வயது ஆண் நபர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 691 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.57 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 511 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,805 பேரும் என 2,316 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 206 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 36 (93.17 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 7 லட்சத்து 382 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 594 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 28 ஆயிரத்து 887 பேர் (65 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 16 ஆயிரத்து 629 பேர் (53 நாட்கள்), பொதுமக்கள் 47 ஆயிரத்து 305 பேர் (37 நாட்கள்) என மொத்தம் 92 ஆயிரத்து 821 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்