உதகை அருகே பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 18 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோகத்தொரை எதுமைக்கண்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர், ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு, வீட்டருகே இருந்த இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையறிந்த குழந்தையின் பாட்டி ராஜகுமாரி, உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (ஏப். 09) வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம் கோபாலகிருஷ்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலினி பிரபாகர் ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
49 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago