புதுச்சேரியில் ஒரே நாளில் புதிதாக 180 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஏப். 5) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 2,702 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-144, காரைக்கால்-31, ஏனாம்-2 மாஹே-3 என மொத்தம் 180 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 684 ஆகவும், இறப்பு விகிதம் 1.61 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 42 ஆயிரத்து 539 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 390 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,287 பேரும் என மொத்தமாக 1,677 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 178 (94.45 சதவீதம்) ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 490 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 28 ஆயிரத்து 512 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 28 ஆயிரத்து 211 பேர், முன்களப் பணியாளர்கள் 16 ஆயிரத்து 270 பேர், பொதுமக்கள் 36 ஆயிரத்து 148 என மொத்தம் மொத்தமாக 80 ஆயிரத்து 629 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 mins ago
ஜோதிடம்
12 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago