மக்கள் நீதி மய்யம் மக்களுக்கு மிக அருகில் இருக்கும் கட்சி என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியல் என்பது எங்களது குடும்ப வாழ்வில் ஒருஅங்கமாகவே இருந்து வந்துள்ளது. அதேபோல சினிமா என்பது மற்றோர் அம்சமாக இருந்துள்ளது. இதன் மூலமாக மக்களுடன் நாங்கள் இருந்து வருகிறோம்.
கோவையை பொறுத்தவரை, இது வளர்ச்சி மிகுந்த நகரம். மக்கள் அனைவரும் வசதியாக இருப்பார்கள் என்றே நினைத்திருந்தோம். ஆனால் குறிப்பிட்ட சதவீத மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளனர் என்பது இங்கு வந்து பார்த்த பிறகு தெரிந்தது. தமிழகத்தை அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து விட்டனர். ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கும் கட்சிகள், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மக்களை மறந்து விடுகின்றனர்.
நான் சாதாரண பிரஜையாக கோவை மக்களை சந்திக்க வந்தேன். கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மக்கள் மலர்ந்த முகத்துடன் வரவேற்பளித்தனர். அனைத்து பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிலும் ஒழுக்கத்தை பின்பற்றக்கூடியவர். தேர்தல் பிரச்சாரத்திலும் அதே ஒழுக்கத்தை கடைபிடித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் மக்களுக்கு மிக அருகில் இருக்கும் கட்சி. தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு கூட உடனடி தீர்வு தரும் தைரியத்தை கமல்ஹாசனிடம் பார்க்க முடிகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
12 hours ago