தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்சென்று வாக்களிப்பவர்களின் வசதிக்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகள் உட்பட 14,215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்க உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 5-ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன், 3,090 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தலை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 2 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 550-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளோம். ஆனாலும், பேருந்துகளில் பெரிய அளவில் கூட்டம்இல்லை.
கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் வரும் 4, 5-ம் தேதிகளில் சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் அருகே என பல பகுதிகளில் இருந்து பேருந்துகளை பிரித்து இயக்க உள்ளோம்.
கரோனா பரவலும் அதிகரித்துவருவதால், கடைசி நேரத்தில் கூட்டம் கூடுவதை மக்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள், முதியோர் வெளியூர் பயணத்தை தவிர்க்கலாம்.
விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட தூரம் செல்பவர்கள் www.tnstc.in. என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சொந்த ஊர் செல்பவர்கள் தேர்தல் முடிந்துதிரும்பி வர வசதியாக, 7-ம் தேதி முதல் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago