மக்களை பற்றி கவலைப்படாத அதிமுக: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சி மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி என்று திமுக மாநில மகளிரணி செய லாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.

ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து கனிமொழி எம்.பி. சேத்தூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனை ஆதரித்து சேத்தூரில் பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசி பகுதியில் ஒன்றும் செய்யாமல் இங்கு வந்து நின்று முயற்சி செய்து பார்க்கிறார். எப்படியெல்லாம் பேசக் கூடாதோ, அப்படியெல்லாம் அவர் பேசி வருகிறார். எங்களுக்கு மோடி இருக்கிறார். மோடி எங்கள் டாடி என்று பேசியவர் அவர்.

வெற்றி நடைபோடும் தமிழகம் என்று கூறுகின்றனர். ஆனால் ஊழல் மட்டும் தான் தமிழ்நாட்டில் வெற்றி நடைபோடுகிறது. ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர் அமைச் சராக இருந்து வருகிறார்.

ஆவின் நிறுவனத்தில் செய்யப் பட்ட முறைகேட்டால் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை குறைக்கப்படும் என அதிமுகவினர் கூறினர். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சி மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி.

ராஜபாளையம் பகுதி நெச வாளர்கள் நிறைந்த பகுதி. நெச வாளர்களுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரம், திமுக ஆட்சி அமைந்தவுடன் 300 யூனிட்டாக உயர்த்தப்படும். ராஜபாளையம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாம்பழ குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். சிட்கோ தொழிற் பேட்டை அமைக்கப்பட்டு அந்த தொழிற்பேட்டையில் 75 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

38 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்