திருப்பரங்குன்றம் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

சிறையில் இருந்து விடுதலை யான சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். சில நாட்கள் ஓய்வு எடுத்த அவர் தற்போது ஆன்மிகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மதுரை வீரன் சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் தரிசனம் செய்தார்.

அவர் நேற்று முன்தினம் மதுரையில் தங்கினார். நேற்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றார். கோயிலில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக தரிசனம் செய்தார்.

அவருடன் டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட உறவினர்கள் வந்திருந்தனர்.

கோயிலில் இருந்து வெளியே வந்த சசிகலாவை அமமுக வேட்பாளர்கள் டேவிட் அண்ணாத்துரை (திருப்பரங் குன்றம்), மகேந்திரன் (உசிலம் பட்டி), அமமுக கூட்டணிக் கட்சி யான மருதுசேனை சங்கத்தின் வேட்பாளர் ஆதிநாராயணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

தமிழகம்

46 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்