மதுரையின் நெரிசலை குறைக்க புதிய திட்டம் அறிவிப்பு இல்லை: தேர்தல் பிரச்சாரத்தில் கூட சொல்ல மறந்த வேட்பாளர்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரைக்கு வராத திட்டங்களைச் சொல் லியும், நிதி ஒதுக்காத திட்டங்களைக் கூறியும் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள், இதுவரை தீர்வு காணப்படாத மதுரையின் போக்குவரத்து நெரிசலை பற்றி மறந்தும் வாய் திறக்காமல் இருப் பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரான மதுரை, மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய நகரம். இந்த நகரின் சாலைகள் அனைத் தும் அதிகரித்துள்ள மக்கள்தொகை, நவீன காலத்தின் கட்டமைப்புக்கு தகுந் தாற்போல் மேம்படுத்தப்படாமல் குறு கலாகவும், ஒழுங்கற்றும், பார்க்கிங் வசதி இல்லாமலும் உள்ளன. இச்சாலைகளில் வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து இடை வெளி இல்லாமல் மிக நெருக்கமாக உள் ளன. மக்களும், நகர்ப்புற பகுதிகளில் மிக நெருக்கமாக வசிக்கின்றனர்.

மல்டி லெவல் பார்க்கிங்

நகர்ப்புற சாலைகளில் உள்ள பெரும் பாலான வியாபார நிறுவனங்களுக்கு பார்க்கிங் வசதியில்லாததால் வாடிக்கை யாளர்கள் சாலையையே பார்க்கிங்காக பயன்படுத்துகின்றனர். முக்கிய சாலைகளில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி யுள்ள வீதிகள், மாட்டுத்தாவணி முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையம் வரை மேம் பாலங்கள் எதுவும் கட்டப்படாததால் வாகனங்கள் நாள் முழுவதும் சாலைகளை கடந்து செல்ல சிரமப்படுகின்றன. சில நேரங்களில் மணிக்கணக்கில் நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகரித்துள்ள வாகன நெரிசலுக்கு ஏற்ப சாலை கட்டமைப்பும், பார்க்கிங் வசதியும் மதுரையில் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

வெளிவட்டச் சாலை

10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த சிட்டம்பட்டி-வாடிப்பட்டி வெளிவட்டச் சாலைத் திட்டம் தற்போதுவரை தொடங் கப்படவில்லை. அதனால் நகர் பகுதிகளில் நெரிசல் அதிகரித்து தினமும் நகரின் போக்குரவத்து ஸ்தம்பிக்கிறது. இந்த வெளிவட்டச் சாலை மட்டும் முடிந்தால் நகரின் போக்குவரத்து நெரிசல் 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை தொடங்க எந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவில்லை. ஆனால் மதுரையில் தேவையில்லாத இடங்களில் கொண்டுபோய் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை விரயமாக்கியுள்ளனர்.

மதுரைக்கு பிறகு வளர்ச்சியடைந்த நகரங்களில் கூட பறக்கும் பாலம், மேம்பாலங்கள் அதிகளவில் கட்டப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் தீர்வு கண்டுள்ளனர். ஆனால் மதுரையில் அறிவித்த ‘மெட்ரோ ரயில் திட்டம்’ தற்போது வரை வரவில்லை. ஆனால் மதுரையுடன் அறிவித்த கோவைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதேபோல் மதுரை உட்பட சில இடங்களில் விமான நிலையத்துக்கு இணையான வசதி கொண்ட ‘பஸ்போர்ட்’ திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. மற்ற இடங்களில் இடம் தேர்வு செய்து பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. ஆனால் மதுரையில் ‘பஸ்போர்ட்’ திட்டத்துக்கான இடம்கூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் இந்த திட்டமே பக்கத்து மாவட்டங்களுக்கு கைவிட்டுப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோரிப்பாளையம் மேம்பாலம்

கோரிப்பாளையம் உயர்மட்ட மேம் பாலம், அங்கிருந்து சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ்நிலையம் வரையிலான பறக்கும் பாலம் போன்றவை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்த திட்டங்களாகும்.

இந்த திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்த்து மேம்பாலம் கட்டுவதற்கு உள்ளூர் அமைச்சர்கள் முயற்சி எடுக்கவில்லை.

அதனால் மாட்டுத்தாவணியில் இருந்து காளவாசல் செல்ல தற்போது 1 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. பறக்கும் பாலம் கட்டினால் இந்த பயண நேரம் குறைவதோடு வாகனங்களும், பொதுமக்களும் சிரமமில்லாமல் விரைவாக சென்று வரலாம். ஆனால் இதுபோன்ற நீண்டகால போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாக்குறுதிகளை தற்போது மாநகரப் பகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களே மறந்து விட்டனர்.

வாக்குறுதிகளை கூட சொல்வதற்கு மறந்த வேட்பாளர்கள், எப்படி வெற்றி பெற்று இந்த திட்டங்களை தூசி தட்டி நிறைவேற்றுவார்கள் என்று மதுரை மக்கள் கவலையடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்