சட்டப்பேரவை தேர்தல், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது,வெயிலின் கடுமை கருதி, மின்தடைஏற்படாமல் இருக்க தேவைப்பட்டால் மட்டுமே மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, மின்வாரியம் மின்வழித்தடங்களில் அனுப்பி, மின்மாற்றி,மின்விநியோகப் பெட்டியின் உதவியுடன் மின்விநியோகம் செய்யப்படுகிறது. மின்மாற்றி, மின்விநியோகப் பெட்டி ஆகியவற்றில் எப்போதும் மின்சாரம் செல்வதால் அவை வெப்பத்துடன் இருக்கும்.
இதனால், குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகளைமேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்படும்.இதனால், துணைமின் நிலையம், மின்மாற்றிகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. இப்பணிக்காக, தொடர்புடைய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கரோனா தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர். அத்துடன், வெயில் கடுமை அதிகரித்துள்ளதால், மின்தடை ஏற்படாமல் இருக்க, அவசியத் தேவைப்பட்டால் மட்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மின்வாரிய பொறியாளர்களையும் மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 min ago
ஓடிடி களம்
46 mins ago
தமிழகம்
25 mins ago
வணிகம்
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
28 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago