செய்யாற்றைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்காத அதிமுகவைச் சேர்ந்த தூசி மோகன் எம்எல்ஏவைக் கண்டித்து செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தூசி மோகன் போட்டியிடுகிறார். இவர் அந்தத் தொகுதியின் தற்போதையை எம்எல்ஏ ஆவார். இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், செய்யாறு தொகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கண்டனப் பேரணி மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுகவினர், தூசி மோகனை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மேலும் அவர்கள், தூசி மோகன் போட்டியிட்டால், செய்யாறு தொகுதியில் அதிமுக வெற்றி பெறாது எனக் கூறினர். அவர்களது போராட்டத்தைக் கட்சியின் தலைமை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, தூசி மோகனும் மனுத்தாக்கல் செய்து களத்தில் உள்ளார். அவருக்கு எதிரான போராட்டம், சற்று தணிந்திருந்த நிலையில், 'புதிய மாவட்டம்' வடிவில் மீண்டும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
இந்த நிலையில், ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து, கடந்த 21-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி, "அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்" என உறுதி அளித்துள்ளார்.
அவரது அறிவிப்பு, ஆரணி தொகுதியில் போட்டியிடும் சேவூர் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அமைந்தாலும், செய்யாறு தொகுதியில் போட்டியிடும் தூசி மோகன் தலையில் இடியாக விழுந்தது.
செய்யாற்றைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் எனத் தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வந்த தூசி மோகனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். அவரைக் கண்டித்து, செய்யாறு தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. செய்யாறு மாவட்டத்தை உருவாக்கிட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிடத் துணைபோன தூசி மோகனைக் கண்டிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளால், செய்யாறு தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
விளையாட்டு
39 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago