தேர்தல் சமயத்தைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பாலாற்றில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.
பாலாறு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மலைக்குன்றங்களில் இருந்து தொடங்கி சிங்கம்புணரி அணைக்கரைப்பட்டி வழியாக விருசுழி ஆற்றில் சேருகிறது.
அணைக்கரைப்பட்டி வழியே செல்லும் பாலாற்றில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. இதனால் நீரின் உறிஞ்சும் தன்மை குறைந்து, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டது.
கிராமமக்கள் புகாரையடுத்து மணல் கடத்தலை அதிகாரிகள் தடுத்து வந்தனர். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதால் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதை பயன்படுத்தி மணல் கடத்தல் கும்பல் பாலாற்றில் 200 மீ., நீளத்திற்கு 20 அடி ஆழத்திற்கு மணலை அள்ளி கடத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘‘ எங்கள் பகுதியில் முக்கிய நீராதாரமாக பாலாறு உள்ளது. இரவு நேரங்களில் லாரிகளில் மணலை கடத்தியுள்ளனர். இதனை தடுக்க அதிகாரிகள் இரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்,’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago