ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் : தேர்தல் பிரச்சாரத்தில் டி.ஆர். பாலு வாக்குறுதி

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்படும் என ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு உறுதியளித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தையை ஆதரித்து திமுக கட்சி பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களைவை உறுப்பினருமான டி.ஆர். பாலு பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று ஸ்ரீபெரும்புதூர் நகரப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் கடந்த திமுகஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகளை விளக்கி வாக்கு சேகரித்தார். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் உறுதியளித்தார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்தார்.

முன்னதாக நடைபெற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு “சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்