தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை சிறையில் அடைப்பு

By ராமேஸ்வரம் ராஃபி

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் இன்று அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே 3 விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலைமன்னார் கடற்படை தளத்தில் மருத்துவ பரிசோதனையின் செய்யப்பட்டபோது தங்கச்சிமடத்தை சார்ந்த மீனவர் ஒருவருக்கு பாலியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவரை மன்னார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அனுமதிக்கப்பட்டார்.

திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை விசாரித்த நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் ஜூலை 4 வரையிலும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் 17 பேரும் அனுராதபுரம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாலியல் நோய் பாதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவரை மட்டும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

உலகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்