தமிழகத்தில் இன்று 567 பேருக்குக் கரோனா தொற்று உறுதி; சென்னையில் 251 பேருக்கு பாதிப்பு- 521 பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 567 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,55,121. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,36,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 8,38,606.

இன்று வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 33,52,322.

சென்னையில் 251 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 316 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,952.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,75,29,190.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 54,841.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,55,121.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 567.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 251.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,16,654 பேர். பெண்கள் 3,38,432 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 348 பேர். பெண்கள் 219 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 521 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,38,606 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,518 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,164 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் யாரும் இல்லை.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்