அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சீர்மரபினர் கிராம மக்களின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்தனர்.
சீர்மரபினருக்கு டிஎன்டி.என்ற சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கிடைத்தன. இந்நிலையில் இச்சான்றிதழ் டிஎன்சி என்று மாற்றப்பட்டதால் சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே இச்சான்றிதழில் மாற்றம் செய்யக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை அதிமுக நிறைவேற்றாததால் பெரியகுளம், கம்பம், அம்மாபட்டி, கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, அம்மா பட்டி உள்ளிட்ட பகுதி மக்களை இவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களின் காலில் விழுந்து அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து சீர்மரபினர் நலச் சங்க மாவட்டத் தலைவர் ராமமூ ர்த்தி கூறுகையில், எங்கள் கோரிக்கை குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, காலில் விழுந்து பிரச்சாரம் செய்து வருகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
29 mins ago
ஜோதிடம்
34 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago