ராகுல் காந்தி மீதான தமிழக மக்களின் அதீத பாசத்தை பாஜகவால் பொறுக்க முடியவில்லை, அதனாலேயே அவர் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கொடுத்துள்ளதாக தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்கிறது. இந்நிலையில், தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நல்ல முடிவு எட்டப்படும். அதைத் தாண்டி தொகுதிப் பங்கீடு தொடர்பான ஊகங்கள், வதந்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது.
அதேபோல், ராகுல் காந்தி மீது பாஜக கொடுத்துள்ள தேர்தல் விதிமுறை மீறல் புகாரை தேர்தல் ஆணையம் நிச்சயம் நிராகரித்துவிடும். தமிழக மக்கள் ராகுல் காந்தி மீது அதிக பாசம் கொண்டுள்ளனர். அந்தப் பாசத்தை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago