எண்ணெய், எரிவாயு சேமிப்புகுறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய செயல் திறன் விருது கிடைத்துள்ளது
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2020-ம் ஆண்டு, ‘சக்ஷம்’ என்றபெயரில் எரிபொருள் சிக்கனம் குறித்து ஒரு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை எண்ணெய் நிறுவனங்கள் நடத்தின.
இதில், எரிபொருள் சிக்கனம் குறித்து கடந்த ஆண்டில் அதிகஅளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய அளவிலான சிறந்த செயல் திறன் விருது வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.ஜெயதேவன் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இந்த விருதுக்கான பாராட்டுப் பத்திரம், சான்றிதழை தமிழக தலைமைச் செயலர்ராஜீவ் ரஞ்சனிடம், இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர்பி.ஜெயதேவன் அண்மையில் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
39 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
4 hours ago