செம்மொழி விருதை மீண்டும் வழங்கக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

திமுக தலைவரால் உருவாக்கப்பட்ட செம்மொழி விருது 2010-ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படவில்லை, அதை மீண்டும் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற அந்தஸ்த்து வழங்கப்பட்டது. 2008-ல் சென்னையிலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் தொடங்கப்பட்டது.

அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை வழங்கி, அந்த நிதியின் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக கடந்த 2010 ம் ஆண்டு வரை விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்த பின் அந்த விருதுகள், வழங்கப்படவில்லை. அந்த விருதுகளை மீண்டும் வழங்க உத்தரவிடவேண்டும் எனக் கோரி, மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த அமர்வு இது அரசியல் முடிவு, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்