த்ரிசக்தி அம்மன் கோயிலில் தேரோட்ட உற்சவம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சியின் கிருஷ்ணா நகரில்  த்ரிசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் மூகாம்பிகை அம்மன் தனித்தனி சந்நிதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 9-ம் நாளான நேற்று தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. 3 தேவியர்களும் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 மாடவீதிகளில் தேர் வலம்வந்து பிற்பகலில் நிலைக்கு வந்தடைந்து.

பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேரின் மீது சென்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கிருஷ்ணன்குட்டி தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டனர்.

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான நேற்று சிம்ம வாகனத்தின் கந்தசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், மாடவீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்