பிரதமர் மோடியின் கோவை வருகை அரசியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும்: தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்து

By செய்திப்பிரிவு

பிரதமரின் கோவை வருகை அரசியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். இதற்காக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகளை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறும்போது, "பிரதமரின் கோவை வருகை அரசியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும். பிரச்சார பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். முதல்வர், துணை முதல்வர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமரை விமான நிலையத்தில் சந்திக்கின்றனர். பொதுக்கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

தமிழக பாரம்பரியத்தை மதிப்பவர் பிரதமர் மோடி. எனவே, அதுதொடர்பாகவும், திட்டங்கள் தொடர்பாகவும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுவார். பாஜகவுக்கு கோவை வலிமையான பகுதி. கட்டமைப்புரீதியாக வலிமையாக இருக்கிறோம். தமிழகம் முழுவதும் பிரதமர் செல்ல உள்ளார். அதில் முதல் கூட்டம் கோவையில் நடைபெறுகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

சினிமா

39 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

மேலும்