கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்டச் செயலர் அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. தலைமையிலான அதிமுகவினர், கட்சி அலுவலகத்தில் இருந்து ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட படத்துடன் ஊர்வலமாகச் சென்று, அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்குமாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
பின்னர், தமிழகத்தில் மீண்டும் முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவது என உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர்மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் கே.ஆர்.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தீபமேற்றி‘அதிமுகவைக் காப்போம்' என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
26 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago