அப்பாவிகளின் நிலத்தை அபகரித்தவர்கள்: திமுகவினர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

By செய்திப்பிரிவு

‘‘2 ஏக்கர் நிலம் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி கூறி அப்பாவி மக்களிடம் 5,193 ஏக்கர் நிலம் அபகரித்தவர்கள் திமுகவினர்’’ என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், டி.குன்னத் தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்க ளிடம் மனுக்களை பெற்றார். அதைத் தொடர்ந்து பல் வேறு நலத்திட்ட உதவிகளை வழங் கினார்.

டி.குன்னத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறிய தாவது: கடந்த சில நாட் களுக்கு முன்பு மதுரையில் ஸ்டாலின் பல்வேறு பொய்யான தகவல்களை கூறிச் சென்றுள்ளார். கடந்த 4 ஆண் டுகளில் மதுரை மாவட் டத்துக்குத் தேவையான 40 ஆண்டு கால வளர்ச்சியை முதல்வர் உரு வாக்கிக் கொடுத்துள்ளார். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தார்களா? ஜல்லிக்கட்டு பிரச்சினையை தீர்த்து வைத் தார்களா? முல்லை பெரியாறு, காவிரி போன்ற பிரச்சினைகளில் நடவடிக்கை எடுத்தார்களா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த 2006-ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறி மக்களை ஏமாற்றியது மட்டுமின்றி, அப்பாவி மக்களிடமிருந்து 5,193 ஏக்கர் நிலங்களையும், 35,78,000 சதுரஅடி வீட்டு மனைகளையும் திமுகவினர் கபளீகரம் செய்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்