வைகை ஆற்றின் குறுக்கே ஒபுளாபடித்துறையில் ரூ.23 கோடியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் 12ம் தேதி இதற்கான டெண்டர் விடப்படுகிறது.
மதுரை வைகை ஆற்றில் உள்ள தரைப்பாலங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு மேம்பாலங்களாக கட்டப்படுகிறது.
அந்த வகையில் வைகை ஆற்றுக் குறுக்கே ஒபுளாபடித்துரையில் உள்ள தரைப்பாலத்தை இடித்துவிட்டு மேம்பாலம் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம், ரூ.26 கோடிக்கு திட்டம் தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது.
ஆரம்பத்தில் இந்த இடத்தில் மீண்டும் தரைப்பாலம் கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்திருந்தது. ஆனால், வெள்ளம் ஏற்படும்போது அது தரைப்பாலத்தை மூழ்கடிக்கும் அபாயம் இருப்பதால் மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது தமிழக அரசு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, வரும் 12ம் தேதி இந்த மேம்பாலம் கட்டுவதற்கான டெண்டர் விடப்படுகிறது.
25ம் தேதி டெண்டர் மறுபரிசீலனை செய்து உரிய டெண்டர் தாருக்கு வழங்கி மேம்பாலம் கட்டுவதற்கு மாநகராட்சி பணி ஆணை வழங்க உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
37 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
ஜோதிடம்
6 mins ago
சினிமா
2 hours ago
உலகம்
2 hours ago