என் தாய்த் தமிழை பேசுபவர்கள் இங்கிருக்கிறார்கள் தெலங்கானாவும் புதுவையும் இனி எனது இரட்டைக் குழந்தைகள்: புதுச்சேரிக்கு வருகை தந்த ஆளுநர் தமிழிசை பேட்டி

By செய்திப்பிரிவு

கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை ஏற்க, தெலங் கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர் ராஜன் நேற்று புதுச்சேரி வருகை தந்தார்.

புதுவையின் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு காவல்துறையின் சார்பில் அணிவகுப்புடன் வழியனுப்பு நிகழ்வு ராஜ்நிவாஸில் நேற்று மாலை நடந்தது. டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா தலைமையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதையடுத்து ஆளுநர் மாளிகையில் தன்னுடன் பணியாற்றியவர்களுடன் கிரண்பேடி புகைப்படம் எடுத்துக் கொண் டார்.

பூரண கும்ப மரியாதை

இந்நிலையில் விமானம் மூலம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று மாலை புதுச்சேரி வந்தார். விமான நிலையத்தில் அவ ருக்கு பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரி மக்கள் என் மீது அன்பாக இருப்பார்கள். நான் அவர்கள் மீது அன்பாக இருப்பேன். தெலங்கானாவில் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு அனுபவத்தை வைத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சிறப்பாக செயல்படுவேன்.

சுதந்திர போராட்ட வீரரான மகாகவி பாரதியார் வாழ்ந்த இம்மண்ணுக்கு வந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு அதிர்ஷ்டம். நான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் தெலங்கானாவையும், புதுச்சேரியையும் இரட்டை குழந்தைகள் போல பாவிப்பேன்.தமிழ் பேசும் மாநிலத்துக்கு ஆளுநராக வந்தது மகிழ்ச்சி.

நான் என்றும் மக்கள் ஆளுநராக இருப்பேன். இதனால் புதுச்சேரி மக்கள் பயன்பெறுவார்கள். தெலங் கானாவுக்கு போன பிறகு தெலுங்கு கற்றுக்கொண்டேன். இங்கு மொழி பிரச்சினையில்லை. என் தாய்த் தமிழை பேசுபவர்கள்தான் இங்கிருக்கிறார்கள். தமிழ் என் பெயரில் மட்டுமில்லை. உயிரிலும் கலந்திருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநராக வந்திருக் கிறேன். அதன்படி செயல்படுவேன். எப் போதும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பணி தொடரும்" என்று குறிப்பிட்டார்.

மணக்குள விநாயகர்

கோயிலில் தரிசணம்

‘புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும் பான்மை நிரூபிக்க எதிர்கட்சிகள் மனு அளித்துள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுவீர்களா?’ என்ற கேள்விக்கு. " நான் தற்போது தான் வந்துள்ளேன் இதை பற்றி முழுமையாக தெரியாது. தற்போது ஆளுநராக மட்டுமே புதுச்சேரிக்கு வந்துள்ளேன்" என்றார்.

இதையடுத்து விமான நிலையத்தி லிருந்து நேரடியாக மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு ராஜ்நிவாஸ் சென்றார்.

அவரை ராஜ்நிவாஸில் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

9 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

11 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

42 mins ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்