தினகரனிடம் இருந்து சசிகலா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயியாக வேடமிட்டவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவருக்கு விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியாது. முதல்வர் பழனிசாமி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மாதம் ஒருமுறை கிராமத்துக்குச் சென்று விவசாயத்தை கவனித்து வருகிறார். ஸ்டாலின்போல ஆடம்பரமாக வாழ்பவர் அல்ல. ஸ்டாலின் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை. சட்டப்பேரவையில் பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருந்துவிட்டார்.
இதுவரை பெற்ற மனுக்களைப் பற்றி பேச முடியாதவர், இனி என்ன சாதிக்கப் போகிறார்.
சசிகலா அதிமுக கொடி கட்டிய விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும். சசிகலாவுக்கு ஓர் எச்சரிக்கை; டிடிவி தினகரனிடம் இருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கட்சியையும், ஆட்சியையும் டிடிவி தினகரனிடம் சசிகலா ஒப்படைத்தார்.
அவர் ஒரே மாதத்தில் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தார். ‘ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல்’ என்கிறார் டிடிவி தினகரன். ஓப்பன் செல்லே தினகரன்தான். எந்தச் சூழலிலும் சசிகலாவின் குடும்பத்துக்கு அதிமுக அடிமையாக இருக்காது.
இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago