108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை

By செய்திப்பிரிவு

தீபாவளியை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.4,800 வழங்கப்பட்டது.

தமிழக அரசு, ஜி.வி.கே. அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (இ.எம்.ஆர்.ஐ.) நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 741 ஆம்புலன்ஸ் களில் பைலட்கள் (ஓட்டுநர்கள்), அவசரக்கால மருத்துவ உதவியாளர்கள், மைய கட்டுப்பாட்டு அறை (கால் சென்டர்) ஊழியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 3,800 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.4,800 வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.4,800 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

27 mins ago

க்ரைம்

21 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

36 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்