புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 3 முதியவர்கள் பலி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கரோனாவுக்கு மூன்று முதியோர் ஒரே நாளில் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 651 ஆக அதிகரித்துள்ளது.

புதுவையில் நேற்று ஆயிரத்து 148 பேருக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 28 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 12 பேர் என மொத்தம் 25 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 39 ஆயிரத்து 96 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 129 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 38 ஆயிரத்து 160 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் 74 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 3 பேர், மாஹேவில் 58 பேர் என 156 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது மொத்தமாக 285 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் புதுவை தியாகராஜ வீதியைச் சேர்ந்த 74 வயது முதியவர், வில்லியனூர் கொம்பாக்கத்தைச் சேர்ந்த 87 வயது முதியவர், பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் என 3 பேர் ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவல் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்