வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் 28-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை

By செய்திப்பிரிவு

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் வரும் 28-ம் தேதி இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி, வரும் 28-ம் தேதி சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. அதேபோல் அன்றைய தினம், ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும்முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்