புதுச்சேரியில் இன்று புதிதாக 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 284 ஆக இருக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன 17) தெரிவித்திருப்பதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் இன்று 2,535 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 30 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 35 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 642 ஆகும். இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை 38 ஆயிரத்து 646 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 119 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 165 பேரும் என மொத்தம் 284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 37 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 720 (97.60 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 617 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 694 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.''
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
7 hours ago