விருதுநகர் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13-ம் தேதி இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. அதையொட்டி, முன்னேற்பாடு மற்றும் தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தின் 10 இடங்களில் இன்று (ஜன. 08) காலை மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை, மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதார மையம், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி போடும் ஒத்திகை முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு ஒரு நாளைக்கு 25 நபர்களுக்கு என தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்