ரஜினியின் முடிவை விமர்சிப்பது முறையல்ல: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டி

By செய்திப்பிரிவு

சிவகங்கையில் திமுக தேர் தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட் டம் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது. எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன் னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் வர்த்தகர்கள், ஆசிரி யர்கள்,பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கூட்டத்துக்குப் பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மு.க.ஸ்டாலினுக்கும், எங்களுக்கும் ரஜினி நெருங்கிய நண்பர்.

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகுவதை விமர்சனம் செய்வது முறையல்ல. ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாரிசு அரசியல் என்று முதல்வர் சொல்வது, துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத்தை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கலாம், என்று கூறினார்.

மதுரையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மடீட்சியா, விவசாயிகள் சங்கம், டாஸ்மாக், யாதவர் இளைஞர் பேரவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.

பின்னர் திமுக நிர்வாகிகளுடன் நடந்த கலந்தாய்வில் மாவட்ட திமுக நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், பி.மூர்த்தி, கோ.தளபதி, எம்.மணிமாறன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்